ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


குருவின் மகிழ்ச்சியே சீடனின் எழுச்சி

Go down

குருவின் மகிழ்ச்சியே சீடனின் எழுச்சி Empty குருவின் மகிழ்ச்சியே சீடனின் எழுச்சி

Post by arutsakthi Thu Feb 06, 2014 5:42 pm

குருவின் மகிழ்ச்சியே சீடனின் எழுச்சி
(குருயஜனம். ஆத்மயஜனம்)

அனந்தஜோதி ஆனந்தஜோதி அத்யந்த ஜோதி அருள் ஜோதி
உத்தம ஜோதி உயர்ந்த ஜோதி உண்மை ஜோதி உருவிலா ஜோதி
பாவ ஜோதி பக்குவ ஜோதி புராண ஜோதி பூர்வ ஜோதி
கண்ட ஜோதி காணா ஜோதி கருணை ஜோதி கமல ஜோதி

வினைக்கு தக்கபடி வாழ்வெடுத்த நாம் அதே நல்வினையின் பயனாய் ஒரு ஸத்குருவை அடைந்து ஞான சாதனை செய்கிறான். இதில் குருவையும் தன்னையும் அறிந்து கொண்ட நிலையில் ஒரு வழிபாடு இருக்கிறது. அதுதான் குருயஜனம். ஆத்மயஜனம் என்ற நிலையில் நமது சிந்தனையில் உலவ விடுகிறோம்.

நமது பிறவிக்கு காரணம் த்வந்தங்களான புண்ய பாபங்களாதி நான்கு வர்க்கங்கள். நமது வீட்டில் விளக்கு அணைந்து விட்டால் இருட்டாகி விடுகிறது. இந்த இருட்டு எங்கிருந்து வந்தது. ஒளியிருக்கும் இடத்திலேயே இருட்டும் இருக்கிறது. ஒளி என்ற ஒன்று இருப்பதை நாம் நினைப்பதால் அதன் எதிரிடையான இருட்டு தெரிகிறது. அத்வைதம் என்பது ஒரு கோட்பாடு. துவைதமான கோட்பாடு தெரிகிறதால் அத்வைதம் என்ற கோட்பாட்டை அத்வைதிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆக ஏதோ ஒன்றுதான் உண்மை என்பது புலனாகிறது. அந்த ஒன்றை நாம் உணரும்போது தான் மற்றது முளைக்கிறது. ஆகவே அந்த ஒன்றை ஒன்று என்று நாம் நினைக்காத நிலைதான் ஸத்யம். இந்த ஸத்யத்தை நாம் ஸந்தேகஹ விபரீத மன்னியில் உணரவேண்டும். அதற்கு ஒரு க்ரியைதான் இந்த யஜனகாரியம். மஹா வாக்கியத்தை போதித்த குரு ஒரு ஸர்வக்ஞர். ஒரு கலைஞர். மேலும் அவர் சிவசக்தியாத்மகமானவர் என்பது அவரது பாதுகா மந்த்ரத்தால் நமக்கு தெள்ளனெ உணர்வாகிறது. அதில் ஹஸக்ஷமலவரயூம் என்பது சிவம், ஸஹக்ஷமலவரயீம் என்பது சக்தி அல்லவா. இவ்வாறான குரு பரம்பொருளே! சிந்தாமணி மந்த்ரம் என்பது ஒன்று. அது சிந்தித்ததை எல்லாம் அருளவல்லது. அந்த மந்த்ரத்தின் விரிவாக்கமேதான் நமது குருபாதுகா மந்த்ரத்திலுள்ள ஹஸஷமலவரயூம், ஸஷஹமலவரயீம் என்பது. இந்தகுரு ஸாதகனுக்கு சிந்தித்த ஸகலமான நிலைகளையும் அருள வல்லவர் என்பது இதன் மூலம் உணருகிறோம்.

சிந்திப்பது என்ன என்றால் அது பொருளானாலும் அருளானாலும் சரியே1 அதனால் ஸாதகன் இந்த மேலான நிலையை அதாவது குருவின் மேலான நிலையை உணரவேணுமானால் நாமும் அவர் நிலைக்கு மாறவேணும். அதனால்தான் ஸாதகன் தன்னின் நிலையை இங்கு சிந்திக்கும் நிலையில் இந்த ஆத்மயஜனம் உள்ளது. காரணம், காரியம் என்ற இருநிலை. நாம் காரணமாகவே இருப்பதை உணர்ந்து விட்டால் காரியம் இல்லைதான். புண்யம் என்ற உணர்வுதான் பாபத்துக்கு காரணம். ஒளியையும் இருட்டையும் பிரிக்க முடியாதல்லவா! அதுபோல்தான் புண்யத்தையும் பாபத்தையும் பிரிக்கமுடியாது. இது ஞானயாகம். வெளிக்காரியங்கள் எதுவும் இல்லை.

தர்மா(அ)தர்ம ஹவிர்தீப்தௌ ஆத்மாக்னௌ மனஸாச்ருசா
ஸுஷும்னா வர்த்தமனா நித்ய மஷவ்ருத்திம் ஜுஹோம்யஹம்

தர்மம் - அதர்மம் என்பவை அவிகள். ஆத்மாதான் அக்னி. அதாவது சிதக்னி. மனம் என்பது கரண்டி.(ச்ருக்) இப்படிப்பட்ட ஒரு ஞானயாகம் ஸதா நடைபெற்றுக் கொண்டுவருகிறது. அதாவது சும்மா இருப்பதுதான் ஞானயாகம். இது நடைபெற யாககுண்டம் வேண்டுமே! சதுரமான இதற்கு நான்கு பக்கம் உண்டே! ஆத்மா, அந்தராத்மா, பரமாத்மா, ஞானாத்மா இவைதான் பக்க சுவர்கள். இதற்குள்தான் இந்த யாகம் நடைபெறுகிறது. அந்தராத்மா- இது ஆத்மாவுக்குள் உள்ள ஒரு உணர்வு. பரமாத்மா - இது அகண்டமாக எங்கணும் நிறைந்தது. ஞானாத்மா- இது வெறும் உணர்வு மாத்திரம். எல்லாம் ஒன்றாலும் அதன் சோதனைக்காக வேதாந்தம் நமக்கு தனித்தனியே காட்டுகிறது. இந்த யாகம் மனதால் செய்வது. இது அத்தனை சுலபமல்ல. பஹிர்யாகம் என்கிற வெளிபூஜையை இந்த நினைவுடன் செய்தால் சிறப்புதான். இல்லையானலும் கூட பசுபாவத்தில் பாவனாதார்ட்யத்துக்காக செய்து வந்தாலும் இந்த நினைவு நாளடைவில் இவனுக்கு ஸித்திக்கக்கூடும். ஸாதகனுக்கு உழைப்பு முக்கியம். அதுதான் அவனது காரியம். இந்த காரியத்தின் அனுபவம் சித்தத்தில் நடைபெறும். இந்நிலையில் சித்தம் சும்மா இருக்கவேணும். இது மிகவும் கடினமான செயல். இருந்து பாருங்கள் தெரியும்.
ஒரு யோகி. இவர் ஒரு ஆலயத்தின் பிராகாரத்தில் பேசாமல் உட்கார்ந்திருப்பாராம். ஆவர் பேசியோ, பாடியோ யாரும் கண்டதில்லை. கோயிலில் அன்றாடம் நடைபெறும் பூஜைக்குப்பின் அவருக்கு ஒரு கவளம் பிரஸாதம் கொடுத்துவந்தார்கள். இது பல ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்ச்சிதான். ஒரு சமயம் அந்த கோயிலின் நிர்வாகியான ஸமஸ்தானாதிபதி கோயிலுக்கு தர்சனத்துக்கு வந்தார். தர்சனம் முடிந்தபின் பிராகாரம் சுற்றி வரும்போது இந்த யோகியைக் கண்டார்.இவரைப்பற்றி அங்கு விசாரித்தார். அவர்கள் இவரைப்பற்றி அதாவது இவர் பேசாமல் சும்மாவே பல ஆண்டுகளாக இருக்கிறார் என்றார்கள். ஸமஸ்தானாதிபதி அவரிடம் பேச்சு கொடுத்துப்பார்த்தார். ஆனால் அவர் இப்போது பேசினார். என்ன பேசினார் தெரியுமா! 'ஐயா! தாங்கள் என்னைப்போல் ஒருமணிநேரம் இங்கு பேசாமால், ஒரு வேலையும் செய்யாமல், மனதால்கூட எதையும் நினைக்காமல் உட்காரவேண்டும். முடியுமா?' என்றார். ஸமஸ்தானாதிபதி அறிவாளி. அதனால் அவரது சவாலை ஏற்றுக்கொண்டு அவருக்கருகில் உட்கார்ந்துவிட்டார். ஆனால் ஒரு அரைமணிக்குமேல் அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. அப்போதான் பேசாமல், எந்தவேலையும் செய்யாமல், மனதால்கூட எதையும் நினைக்காமல் இருப்பது என்பது எத்தனை கடினம் என்பதை உணர்ந்தார் என்ற கதை ஒரு மஹான் சொன்னது. அதனால் சும்மா இருப்பது மிகவும் கடினமான காரியம். இதைத்தான் கீதாசார்யன் 'யோகேன சித்தஸ்ய . . .. என்றான். எனவே அஹம்ப்ரஹ்மாஸ்மி என்ற மஹாவாக்கியத்தின் லக்ஷயார்த்தமே இந்த உபாஸனை என்பர் ஆன்றோர். நான் நீ என்பதெல்லாம் விவகாரமாத்திரமே! கடல் உள்ளது. அதில் எங்கணும் மேலே மேலே அலைகள் மேலெழும்புவதை நாம் காணுகிறோம். அலையிலும் கடல்நீர்தான். கடலிலும் அதே நீர்தான். கடலுக்கு அடியில் மிகவும் அமைதியான சாந்தம். சாந்தமான கடல்நீரிலிருந்து தான் சப்தமான அலைகளை உண்டாகின்றன. கடலால்தான் அலைக்கு விவகாரமே தவிர அலைகள் தனித்தில்லை. அதுபோல் ஆத்மாவில் அந்த நான் என்ற விவகாரம். இதனை ஸமுத்ரேதிதரங்கம் என்பர். தரங்கேதி ஸமுத்ரம் இல்லை. இதனை நான் நீயாக முடியாது. நீ நானாக முடியும் என்பர் ஆன்றோர். இந்த நிலையை நாம் தெள்ளத்தெளிவாக உணரவேணுமானால் குருதான் வழிகாட்டவேணும்.

முதலில் அவரிருக்கும் இடம் ஏது? எனத் தெளிக. நமது ஸ்தூல சரீரத்தில் ஸஹஸ்ராரம் என்ற 1000 தளகமலத்தின் கீழ் த்வாதசாந்தம் என்ற 12 இதழ்கமலத்தில்தான் குருவின் இருப்பு என தத்துவநூல்கள் கூறுகின்றன. ஸஹஸ்ராரத்திலே உள்ள சித்தின் விகஸிப்பு அல்லது உணர்வு த்வாதசாந்தத்தில்தான் புரிபடும். சித்தை நாம் உணரும் இடம் த்வாதசாந்தம்தான். அந்த இடம் குருநாதருடையது. ஆகவே நாம் பரதேவதையை உணர வேணுமானால் அதற்கு குருநாதர்தான் முதல்படி. அவரில்லையேல் சித்தின் உணர்வு நமக்கு இல்லை. இந்த சித்தின் உணர்வுக்குத்தான் குருயஜனம் செய்கிறோம்.

ஸாதகன் தன் உபாஸனையை தன் ஸாதனையை அவர் முன்பாக நிவேதித்தலே குருயஜனமாகும் என்கிறது தத்துவநூலகள். இந்நிலையில் நமது ஸபர்யா பத்ததியில் 'குருத்ரயம் தர்ப்பயேத் – நிவேதயேத் என்று இதைத்தான் கூறுகிறது. பின் அவரது சேஷத்தோடுகூட விசேஷார்க்கியம் எடுத்து தன்னுடைய ஆத்மயஜனத்தை ஸாதகன் செய்து கொள்ளுகிறான். இங்கு இது நம்மை சற்று சிந்திக்க தூண்டுகிறது. மற்றும் குரு எதிரில் இல்லாதபோது என்ற இடத்தில் உள்ள பத்ததியில் நமக்கு குழப்பம் வர இடமில்லை. இன்று நடைமுறையில் என்ன உள்ளது என்றால் ஸாதகன் குருபாத்திரத்தில் விசேஷார்க்கியம் எடுத்து, குரு ஸந்நிதியில் தன் மூன்று குருமார்களையும் தர்ப்பணபூஜை செய்துவிட்டு அவர்களிடத்தில் அந்த பாத்திரத்தை கொடுத்து விடுகிறான். அவர் அதனை பெற்று தன் சிரஸில் தன் குருத்ரயத்தை தர்ப்பணம் செய்துவிட்டு யஜனம் செய்கிறார். பின் சேஷத்தோடு பாத்திரத்தை ஸாதகனிடம் கொடுக்கிறார். அவன் அதனோடு கூட மேலும் விசேஷார்க்கியம் எடுத்துக்கொண்டு ஆத்மயஜனத்தை செய்கிறான். இங்குதான் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இங்கு ஸாகனுடைய ஸாதனையை அவன் நிவேதிக்கும்போது அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்தானே தவிர அவர் தான் இங்கு ஆத்மஸாதனை செய்பவரல்ல. அவர் தன் ஸாதனையை ஏற்கனவேயே செய்து நமக்கு அருளவே இங்கு எதிரில் இருக்கிறார். அவர் தன் குருத்ரய தர்ப்பணத்தை செய்யத் தேவையில்லை. நிவேதனவஸ்துவை அவர் அப்படியே ஸ்வீகரித்துக் கொள்ள வேண்டியவர்தான். அவர் அளித்த சேஷத்தை ஸாதகன் அப்படியே ஸ்வீகரித்து கொள்ள வேண்டியவனே! ஸாதனுக்குத்தான் குருத்ரய தர்ப்பணமே தவிர குருவுக்கு அல்ல என்பது நமது இந்த சிந்தனை சோதனத்தால் தெளியவருகிறது.

இந்த இடத்தில் இந்த சிந்தனைப்பற்றி நமது நாகசுந்தரம் என்ன சொல்கிறான் என்று பார்க்கிறோம். அவனது அணுகுமறை ஒரு அற்புதம். ஏற்றுக்கொள்ளக் கூடியதே! அனுபவிப்போம்.

மகிழ்வெய்தவெண்ணி- - - - - -

வரலக்ஷ்மி ராவே மா யிண்டிகி என்று ஒரு பாடல் உள்ளதுஇ வரலக்ஷ்மி விரதத்திலும் மற்ற முக்கிய தேவி பூஜைகளிலும் பாடுவார்கள். எனது க்ருஹத்திற்கு எழுந்தருள்வாய் என்று அர்த்தம். அகத்திற்கு லக்ஷ்மி வந்தால் ஒருவர் எவ்வளவு சந்தோஷம் அடைகிறார்கள். அதைப்போல ஸ்ரீவித்யா உபாஸனையில் ஈடுபட்ட ஓர் ஸாதகன் தனது ஸத்குரு எழுந்தருளும்போது அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறான். அப்படி அடையும் மகிழ்ச்சியை நமது குருதேவர் பூஜ்யஸ்ரீசிதானந்தநாதாள் அவர்கள் இப்படி கூறுகிறார் பாருங்கள்.
மகிழ்வெய்தவெண்ணி பலகோடி வகை செய்யினும்
மகிழ்வருமோ ஸத்குருநாதன் வரக்கண்டதும்
மகிழவந்தான் மகிழ்விக்க வந்தான் என்று எவர்மனதில்
மகிழ்வருமோ அவர்தங்களுக்கே மகிழ் வந்திட்டதே
ஏன் அவ்வாறு மகிழ்ச்சி வருகிறது? லக்ஷ்மி கடாக்ஷம் வந்தால் நமது உலக இன்பங்கள் உண்டாகின்றன. அதனால் மகிழ்ச்சி வருகிறது. ஸத்குருநாதன் வரக்கண்டதும் ஸாகனுக்கு ஏன் மகிழ்ச்சி வருகிறது என்றால் அவனுக்கு உண்மையான மகிழ்ச்சியை அருளும் ஆன்மஞானமாகிற மகிழ்வை அவர் வழங்குவதால்தான். ஸத்குருவை அண்டி அவன் உபதேசம் பெற்ற அடுத்த க்ஷணம் அவனுக்கு இந்த மகிழ்ச்சி உண்டாகிறதா என்றால் சிலருக்கே அந்த கணத்திலேயே ஆன்ம ஞானம் ஸித்தியாகிறது. நம்மைப்போன்ற ஸாதாரண வ்யக்திக்கு அவ்விதம் உடனே ஏற்படுவதில்லை என்று காண்கிறோம். அதற்காகவேதான் அவனுக்கு ஸ்ரீவித்யா ஸாதனமான நவாவரண பூஜை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆத்மஞானம் என்றால் மஹாவாக்கியத்தை அனுஸந்தானம் செய்து செய்து அதிலேயே தோய்ந்து தான் தானாகவே ஆவதுதான். இந்த நிலை அனுபவபூர்வமாக நவாவரண பூஜையால் ஸித்திக்கிறது. இந்த ஸித்தி பூஜையின் எந்த ஒரு கட்டத்திலும் அவனுக்கு ஏற்படலாம். அதற்காக பல இடங்களில் மஹாவாக்ய அனுஸந்தானமாகிற மூல மந்த்ர உச்சாரணம் விதிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். (மூலமந்த்ர அர்த்தவிசாரம்தான் மஹாவாக்ய அர்த்தவிசாரம் என்பது குரு வாக்கியம்) அத்தகைய பல கட்டங்களில் ஒரு இடமாக விசேஷார்க்ய ஸ்தாபனம் முடிந்தவுடன் ஓர் இடம் வருகிறது. அதுதான் குருயஜனம்இ ஆத்மயஜனம் என்ற ஒரு கட்டம். மஹாவாக்யம் அனுபவபூர்வமாக ஸித்திக்கும் பொருட்டு ஸ்ரீவித்யையை அனுஷ்டிக்கும் ஸாகதன் அகண்டாகார வ்ருத்தி ஞானமாகிற விசேஷார்க்ய ஸ்தாபனம் முடித்தவுடன் அந்த வ்ருத்தியை தனக்குத்தானே ஹோமம் செய்ய பத்ததி விதிக்கிறது. அதுவரை பரோக்ஷமாக இருந்த வ்ருத்தி ஞானம் அபரோக்ஷமாக ஆகவேண்டுமே அதற்குத்தான் இந்த யஜனம். தான் ப்ரம்மம் என்று உணர்ந்து விடுகிறான் ஸாதகன். இதை மனதாகிற மண்டலத்தில் ஸ்தாபித்து விடுகிறான். ஆனால் ஸத்குரு என்ன சொன்னார்? நீ ப்ரம்மமாய் இருக்கிறாய் என்று கூறி சென்று விட்டார். அதை தன் மனதாகிற மண்டபத்தில் அடிக்கடி ஸ்தாபித்துப் பார்த்துக்கொள்கிறான் ஆன்மஞான ஸாதகன். இப்படி அடிக்கடி ஆன்மபரிசோதனையை செய்து கொள்ளும் ஸாதகன் அதன் மூலம் பலவிதமான அனுபவங்களை அடைகிறான். அவன் மனம் பக்குவப்பட்டுபட்டு மனமிறந்த நிலையை அவன் அடைகிறான். இப்படி இவன் நிற்கையிலே அவன் மனம் அகண்டாகார வ்ருத்தியிலே தோய்ந்து தோய்ந்து இனிப்பாகி சுவைகூடுகிறது. சுவை மிகுந்த பதார்த்தத்தை நமக்கு வெறுமனே உண்ண மனம் வராது அல்லவா? அதை யாருக்கேனும் நிவேதனம் செய்ய வேண்டுமே!

தர்மசாஸ்த்ரம் ருசியான வஸ்துவை தான் மட்டும் உண்ணக்கூடாது என்றே கூறுகிறது. பதார்த்தம் வெளியே இருந்தால் அதை வேறொருவருக்கு கொடுக்கலாம்இ ஆனால் இது ஸத்குரு அருளிய உள்பதார்த்தம். மஹாவாக்ய பதார்த்தம் அல்லவா? அதை அங்கீகரிக்க அவரே ஒரு நாள் இவனது பூஜாக்ருஹத்தை அலங்கரிக்கலாம். அப்படி வரும்போது (ஸத்குரு ஸன்னிதெள) அவரிடம் இவன் தன் மனமாகிற மண்டலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷ ஞானமாம் அகண்டார்த்த அனுபவத்தை அவரது (மனமாகிற) மண்டத்தில் வைக்கப்பட்ட ஞான அனுபவ இனிப்பை நிவேதிக்கிறான். அப்போது இவன்இ குரு மற்றும் இருவரது மனங்களிலும் ஒரே பதார்த்தம் நிரம்பி இருக்கிறதுஇ அவருக்கு ஏற்பட்ட ஞான ஆனந்தத்தை இவனும் இப்போது அனுபவிக்கிறான். அதை அவரிடம் நிவேதனமும் செய்கிறான். அவரும் இவனது ஞான அனுபவத்தை ஆமோதித்து ஹே சீடனே! உனக்கு ஞான அனுபவம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டு விட்டது ! என்று அதியசிக்கிறார். அகம் மகிழ்கிறார். இதைத்தான் முன்பு உள்ள வ்ருத்தம் கூறுகிறது மகிழ வந்தான் மகிழ்விக்க வந்தான் என்று. இப்படி ஞான மகிழ்ச்சியிலே திளைத்த இருவரின் நிலையை எவ்விதம் வர்ணிப்பது? அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த குரு என்ன செய்வார் ? சீடன் என்ன செய்ய வேண்டும் ? என்றெல்லாம் வரையறுக்க இயலாது. அதுதான் உண்மையான பேரின்பம். இதை அடையவே ஸாதனை. இதற்குப்பிறகு வேறு ஸாதனையும் மேற்கொண்டு செய்ய வேண்டுமா என்ன? இருந்தாலும் உலக நலனைக்கருதி அந்த குரு சீடனை திரும்பவும் இந்த உலக நினைவுக்கு வந்து மேற்கொண்டு பூஜையை செய்ய ஆணையிடுகிறார்.

இதுவே குருயஜனமும் ஆத்மயஜனமும் நமக்கு தெரிவிக்கும் கருத்துக்கள் என்று ஆன்றோர்களும் தந்த்ரங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன என தோன்றுகிறது.. செய்து சிறக்க சிவந்த குரு அருளட்டும்.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum