Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 BotNone
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
ஆழ்நிலை த்யானம்
3 posters
Page 1 of 1
ஆழ்நிலை த்யானம்
துறவிகளும் ஞானிகளும் ஆழ்நிலை த்யானத்தில் ஈடுபடும்போது ஐம்புலன்களையும் அடக்குகிறார்கள் மூச்சு காற்று தவிர்த்து.
இதே நிலை நம் ஆழ்நிலை உறக்கத்திலும் நம் ஐம்புலன்களும் (நம் மூச்சுகாற்று
தவிர )அடங்கி விடுகிறது. ஆனால் த்யானம் செய்ய முடிவதில்லை. அங்கு நிகழ்வதெல்லாம் கனவு மாயம் என்கிறோம் இது என்ன நிலை
விளக்கம் அளித்தால் என் மனநிலை தெளிவடையும்
நன்றி
கல்யாணி
ஜனவரி 10 2014
இதே நிலை நம் ஆழ்நிலை உறக்கத்திலும் நம் ஐம்புலன்களும் (நம் மூச்சுகாற்று
தவிர )அடங்கி விடுகிறது. ஆனால் த்யானம் செய்ய முடிவதில்லை. அங்கு நிகழ்வதெல்லாம் கனவு மாயம் என்கிறோம் இது என்ன நிலை
விளக்கம் அளித்தால் என் மனநிலை தெளிவடையும்
நன்றி
கல்யாணி
ஜனவரி 10 2014
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
தியானத்தில் நமது விழிப்புணர்வுடன் மூச்சை தவிர்த்து மற்ற புலன்களை அடக்குகிறோம் . ஆனால், உறக்கத்தில் தூங்குகிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மற்ற புலன்கள் அடங்குகின்றன.
தியானம் ஒரு உணர்கின்ற உறக்கம்;
உறக்கம் ஒரு உணர்வற்ற தியானம்.
தியானத்தில் எனது புலன்களை அடக்குகின்றேன் என்று உணர்பவன் யார்?
உறக்கத்தில் என் புலன்களை அடங்க செய்தவன் யார்?
இந்த வினாக்களுக்கு உங்களுக்குள் விடை தேடுங்கள்..
தியானத்தில் நமது விழிப்புணர்வுடன் மூச்சை தவிர்த்து மற்ற புலன்களை அடக்குகிறோம் . ஆனால், உறக்கத்தில் தூங்குகிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மற்ற புலன்கள் அடங்குகின்றன.
தியானம் ஒரு உணர்கின்ற உறக்கம்;
உறக்கம் ஒரு உணர்வற்ற தியானம்.
தியானத்தில் எனது புலன்களை அடக்குகின்றேன் என்று உணர்பவன் யார்?
உறக்கத்தில் என் புலன்களை அடங்க செய்தவன் யார்?
இந்த வினாக்களுக்கு உங்களுக்குள் விடை தேடுங்கள்..
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
ஓம் ஸ்ரீ குருப்யோநமாஹா
விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி
கல்யாணி
விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி
கல்யாணி
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
தியானம் ஒரு அற்புதமான அனுபவம்.
தன்னை பற்றி அறிய ஒவ்வொருவருக்கும் விருப்பம் உள்ளது. தன்னை ஜோதிடம், ஆருடம் , மந்திரம் , தந்திரம் போன்றவைகளில் அறியாமல் , தன்னை பற்றி தன்னிடத்திலே தேடி உணர்ந்து கொள்ளுதலே தியான அனுபவமாகும் . எல்லோரும் தியானம் அனுபவம் பெற தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால், மன உறுதி உடையவனே இந்த யோகத்தில் உள்ளதை, உள்ளபடி அறிகிறான். பொறுமையும் நிதானமும் உடையவர்கள் இந்த யோகத்தை பெறுகின்றனர்.
.....தியானம் பற்றி மேலும் தொடர்வோம்..
தியானம் ஒரு அற்புதமான அனுபவம்.
தன்னை பற்றி அறிய ஒவ்வொருவருக்கும் விருப்பம் உள்ளது. தன்னை ஜோதிடம், ஆருடம் , மந்திரம் , தந்திரம் போன்றவைகளில் அறியாமல் , தன்னை பற்றி தன்னிடத்திலே தேடி உணர்ந்து கொள்ளுதலே தியான அனுபவமாகும் . எல்லோரும் தியானம் அனுபவம் பெற தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால், மன உறுதி உடையவனே இந்த யோகத்தில் உள்ளதை, உள்ளபடி அறிகிறான். பொறுமையும் நிதானமும் உடையவர்கள் இந்த யோகத்தை பெறுகின்றனர்.
.....தியானம் பற்றி மேலும் தொடர்வோம்..
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
நன்றி திரு பாபாஜி அவர்களே.
தங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருகிறோம்.
தங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருகிறோம்.
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
என்னை பற்றி நான் ஏன் அறிந்துகொள்ள வேண்டும் ? இதனால், என்ன பயன்?
நான் இப்பொழுதே, நானாகத்தானே இருக்கிறேன், இன்னும் என்னை பற்றி அறிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது ..?
இவ்வாறான எண்ணங்கள் நம் மனதில் எழலாம்.
இவை ஏன் எழுகின்றன?
நம் உடல் மூலமாக நாம் செய்யும் அனைத்து செயல்களையும் , ' நான்தான் செய்கிறேன்; என்னால்தான் இவை
செய்யப்படுகின்றன' என்று எண்ணிக்கொள்கிறோம் .
உண்மையில் ஒரு பெரும் சக்தியின் உந்துதல், நம்முடைய செயல்களின் பின்னணியில் உள்ளதை அறிவதில்லை.
அந்த சக்தி எப்படி இருக்கும் ? அதை நாம் ஏன் உணரமுடியவில்லை அல்லது உணர முயற்சிக்கவில்லை?
எது அதை தடுக்கிறது?
இயல்பாகவே, நம் அனைத்து செயல்களும் நடைபெறும்போது அச்சக்தியை நாம் அறிய முயல்வதில்லை.
சற்றே , அவற்றில் நம் எண்ணத்திற்க்கு மாறாக நடக்கும் பொழுது , மன அமைதி இழக்கிறோம்; துயரப்படுகிறோம்;
சஞ்சலப்படுகிறோம்; புகலிடம் தேடுகிறோம்..
இந்த நிலைமை ஏன் ஏற்படுகிறது?
இயல்பு - இயல்பின்மை, அமைதி - அமைதியின்மை , சுகம் - துக்கம், ஏற்றம் - இறக்கம் , திருப்தி - திருப்தியின்மை
நம் மனதில் ஏற்பட என்ன காரணம் ?
.....தியானம் பற்றி மேலும் தொடர்வோம்..
என்னை பற்றி நான் ஏன் அறிந்துகொள்ள வேண்டும் ? இதனால், என்ன பயன்?
நான் இப்பொழுதே, நானாகத்தானே இருக்கிறேன், இன்னும் என்னை பற்றி அறிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது ..?
இவ்வாறான எண்ணங்கள் நம் மனதில் எழலாம்.
இவை ஏன் எழுகின்றன?
நம் உடல் மூலமாக நாம் செய்யும் அனைத்து செயல்களையும் , ' நான்தான் செய்கிறேன்; என்னால்தான் இவை
செய்யப்படுகின்றன' என்று எண்ணிக்கொள்கிறோம் .
உண்மையில் ஒரு பெரும் சக்தியின் உந்துதல், நம்முடைய செயல்களின் பின்னணியில் உள்ளதை அறிவதில்லை.
அந்த சக்தி எப்படி இருக்கும் ? அதை நாம் ஏன் உணரமுடியவில்லை அல்லது உணர முயற்சிக்கவில்லை?
எது அதை தடுக்கிறது?
இயல்பாகவே, நம் அனைத்து செயல்களும் நடைபெறும்போது அச்சக்தியை நாம் அறிய முயல்வதில்லை.
சற்றே , அவற்றில் நம் எண்ணத்திற்க்கு மாறாக நடக்கும் பொழுது , மன அமைதி இழக்கிறோம்; துயரப்படுகிறோம்;
சஞ்சலப்படுகிறோம்; புகலிடம் தேடுகிறோம்..
இந்த நிலைமை ஏன் ஏற்படுகிறது?
இயல்பு - இயல்பின்மை, அமைதி - அமைதியின்மை , சுகம் - துக்கம், ஏற்றம் - இறக்கம் , திருப்தி - திருப்தியின்மை
நம் மனதில் ஏற்பட என்ன காரணம் ?
.....தியானம் பற்றி மேலும் தொடர்வோம்..
Last edited by babaji12 on Mon Apr 13, 2015 12:32 pm; edited 1 time in total
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
இவ்வாறு பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. நமக்கு இதற்க்கான பதில்கள் எங்கு கிடைக்கும்?
சற்றே , உற்று நோக்கினால் , இந்த கேள்விகள் எங்கு எழுகின்றன? நமக்குள்தானே?
அப்பொழுது பதில்கள் எங்கிருந்து பெறப்படவேண்டும்? நமக்குள்தானே?
ஒரு வினா எழுந்த இடத்தில் , விடையை தேடுவதோ அல்லது பெறுவதோதானே சரியான ஒன்றாக இருக்கமுடியும்?
அவ்வாறெனில் , நானே வினா... நானே விடை..... அந்த நான் யார்? .... என் அடையாளம் என்ன?
என் பெயரா? என் உடலா? என் கல்வியா? என் தொழிலா?
அல்லது இவற்றைக்கடந்து , இவைகளுக்கு அப்பால் நான் இருக்கிறேனா ?
நான் யார்....?
...... தியானம் மேலும் தொடரலாம்...
இவ்வாறு பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. நமக்கு இதற்க்கான பதில்கள் எங்கு கிடைக்கும்?
சற்றே , உற்று நோக்கினால் , இந்த கேள்விகள் எங்கு எழுகின்றன? நமக்குள்தானே?
அப்பொழுது பதில்கள் எங்கிருந்து பெறப்படவேண்டும்? நமக்குள்தானே?
ஒரு வினா எழுந்த இடத்தில் , விடையை தேடுவதோ அல்லது பெறுவதோதானே சரியான ஒன்றாக இருக்கமுடியும்?
அவ்வாறெனில் , நானே வினா... நானே விடை..... அந்த நான் யார்? .... என் அடையாளம் என்ன?
என் பெயரா? என் உடலா? என் கல்வியா? என் தொழிலா?
அல்லது இவற்றைக்கடந்து , இவைகளுக்கு அப்பால் நான் இருக்கிறேனா ?
நான் யார்....?
...... தியானம் மேலும் தொடரலாம்...
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
தங்களின் ஒவ்வொரு தொடரும் மிகவும் அருமையாக இருக்கிறது.
நான் மீண்டும் மீண்டும் பல முறைகள் படிக்கிறேன். மனதில் ஏதோ ஒரு சிறு அமைதி ஏற்படுவதுபோல் உணர்கிறேன்.
மிகவும் நன்றி. மற்ற தொடர்களை ஆவலுடன் நாங்கள் யாவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
மீண்டும் நன்றி
கல்யாணி
நான் மீண்டும் மீண்டும் பல முறைகள் படிக்கிறேன். மனதில் ஏதோ ஒரு சிறு அமைதி ஏற்படுவதுபோல் உணர்கிறேன்.
மிகவும் நன்றி. மற்ற தொடர்களை ஆவலுடன் நாங்கள் யாவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
மீண்டும் நன்றி
கல்யாணி
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
நான் எப்பொழுதுமே அமைதிதான் , ஆனந்தம்தான் .... இதை என்னால் ஏன் அறியமுடியவில்லை. ?
மிகப்பெரிய சக்தியிடம் எல்லாவற்றிற்கும் பதில் உண்டு.
இதை நம்பிக்கையாகவும் தீர்க்கமாகவும் உணருங்கள். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அப்பெரும்சக்தி எப்பொழுதும் காத்திருக்கிறது... ஆனால் , நாம் தயாரா?
இதுவரை இங்கு எழுதப்பட்ட விஷயங்களை மறுபடியும் படியுங்கள். மீண்டும் படியுங்கள். ஒரு மிகப்பெரும்சக்தி உங்களை அரவணைத்துள்ளது என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள்.
அது என்றுமே உங்களை விட்டு விலகவில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
இங்கு பதிவு செய்யப்படும் விஷயங்கள் அனைத்தும் அச்சக்தியின் வெளிப்பாடுகள் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்பொழுது கண்களை மூடி சிறிது நேரம் அமைதியை இருங்கள்.
எந்த மந்திரமோ, ஜெபமோ, யோகாசனமோ எதுவும் செய்யாதீர்கள். உங்களால் , சிறுது நேரம் கண்களை மூடிக்கொண்டு , தூங்காமல் அமர்ந்து இருக்கமுடியுமா என்று உங்களையே நீங்கள் சோதனை செய்து பாருங்கள்.
உங்களின் உறுதியை அறிந்து கொள்ளுங்கள்.
எத்தனை நேரம் உங்களால் இவ்வாறு அமர்ந்திருக்க முடிந்தது என்பதை பாருங்கள். தரையிலோ, நாற்காலியிலோ எங்கு வேண்டுமானாலும், எப்படி உங்களுக்கு சவுகரியமோ அப்படி அமர்ந்துகொள்ளுங்கள். உறங்காதீர்கள்.
முற்றிலும் நீங்கள் நீங்களாகவே இருக்க முயலுங்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மை. அதனால், நீங்கள் நீங்களாக இருப்பீர்கள்.
சிறிது காலம் இப்பயிற்சியை பழகி வாருங்கள். உங்களுக்கு உறுதி உள்ளதா என்பதை தீர்மானிக்கலாம்.
இப்பயிற்சி தொடர்பான சந்தேகங்கள் வந்தால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். நாம் ஒரு மிகப்பெரிய சக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதை அடிக்கடி நினைவு கொண்டிருங்கள்...
..........மேலும் தொடரலாம்...
நான் எப்பொழுதுமே அமைதிதான் , ஆனந்தம்தான் .... இதை என்னால் ஏன் அறியமுடியவில்லை. ?
மிகப்பெரிய சக்தியிடம் எல்லாவற்றிற்கும் பதில் உண்டு.
இதை நம்பிக்கையாகவும் தீர்க்கமாகவும் உணருங்கள். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அப்பெரும்சக்தி எப்பொழுதும் காத்திருக்கிறது... ஆனால் , நாம் தயாரா?
இதுவரை இங்கு எழுதப்பட்ட விஷயங்களை மறுபடியும் படியுங்கள். மீண்டும் படியுங்கள். ஒரு மிகப்பெரும்சக்தி உங்களை அரவணைத்துள்ளது என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள்.
அது என்றுமே உங்களை விட்டு விலகவில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
இங்கு பதிவு செய்யப்படும் விஷயங்கள் அனைத்தும் அச்சக்தியின் வெளிப்பாடுகள் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்பொழுது கண்களை மூடி சிறிது நேரம் அமைதியை இருங்கள்.
எந்த மந்திரமோ, ஜெபமோ, யோகாசனமோ எதுவும் செய்யாதீர்கள். உங்களால் , சிறுது நேரம் கண்களை மூடிக்கொண்டு , தூங்காமல் அமர்ந்து இருக்கமுடியுமா என்று உங்களையே நீங்கள் சோதனை செய்து பாருங்கள்.
உங்களின் உறுதியை அறிந்து கொள்ளுங்கள்.
எத்தனை நேரம் உங்களால் இவ்வாறு அமர்ந்திருக்க முடிந்தது என்பதை பாருங்கள். தரையிலோ, நாற்காலியிலோ எங்கு வேண்டுமானாலும், எப்படி உங்களுக்கு சவுகரியமோ அப்படி அமர்ந்துகொள்ளுங்கள். உறங்காதீர்கள்.
முற்றிலும் நீங்கள் நீங்களாகவே இருக்க முயலுங்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மை. அதனால், நீங்கள் நீங்களாக இருப்பீர்கள்.
சிறிது காலம் இப்பயிற்சியை பழகி வாருங்கள். உங்களுக்கு உறுதி உள்ளதா என்பதை தீர்மானிக்கலாம்.
இப்பயிற்சி தொடர்பான சந்தேகங்கள் வந்தால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். நாம் ஒரு மிகப்பெரிய சக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதை அடிக்கடி நினைவு கொண்டிருங்கள்...
..........மேலும் தொடரலாம்...
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
திரு பாபாஜி 12 அவர்களுக்கு,
தாங்கள் எழுதி இருந்தபடி, கண்களை மூடி, எந்தவித ஜபமோ, மந்திரமோ,
சிந்தனையோ இல்லாமல்,ஒரு இடத்தில் அமர்ந்து, தியானம் செய்ய முயற்சித்து செய்து வருகிறேன். ஆனால் 60 வினாடிகள் அல்லது 90 வினாடிகளுக்கு மேல் மனம் அலைபாய ஆரம்பித்து விடுகிறது. கீழ்கண்ட வரிகளை நினைவில் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
"நீ ஓடும்போது
தோல்வி உன்னை
துரத்துவதாக உணர்ந்தால்
தொடர்ந்து ஓடு
நீ வெற்றிக்கு அருகாமையில்
இருக்கிறாய் என்பதையே
அது உணர்த்துகிறது. "
தங்களுக்கு தெரிவிக்கவே இதை எழுதுகிறேன்.
நன்றி
கல்யாணி வெங்கடராமன்
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
நமது மனம் என்பது பல எண்ணங்களின் தொகுப்பு.
நாம் விழித்திருக்கும் நிலையில் எண்ணங்களின் வெளிப்பாடு குறைந்தளவே இருக்கும்.
ஆனால், கண்களை மூடினாலோ எண்ணற்ற எண்ணங்கள் நம்மை தொடர்கின்றன; இடையூறு செய்கின்றன.
இந்த எண்ணங்களை என் விருப்பத்துடன் வந்தனவா? அல்லது என் அனுமதி இல்லாமலேயே
வருகின்றனவா?
என் அனுமதி இல்லாமல் வருகின்றன என்றால் , என் மனம் என் கட்டுபாட்டில் இல்லை என்று கொள்ளலாம்;
மாறாக இருந்தால், எண்ணங்களை கட்டுப்படுத்தும் வல்லமை என்னிடத்தில் உள்ளது என்று கொள்ளலாம்.
என் அனுமதியோ, என் விருப்பமோ இல்லாமல் வருகின்ற எண்ணங்களை எனக்குள் செலுத்துவது யார்?
சிறிது நேரம் நான் கண்களை மூடி அமர்வதற்குள் என் மனம் அலைபாயக் காரணம் என்ன?
நான் எங்கே செல்கிறேன்?
ஏன் குறைந்த நேரமே கண்களை மூடி என்னால் இருக்க முடிகிறது?
இந்த கேள்விகளை நீங்கள் கண்களை மூடி இருக்கும் நிலையில் உங்களுக்குள் கேளுங்கள்...
விடைகளை உடனே எதிர்பார்க்காதீர்கள்.
இங்கு கூறப்படும் அனைத்து விஷயங்களையும் யாவரும் தவறாமல் பின்பற்றுங்கள்.
நீங்கள் எண்ணங்களற்ற நிலைக்கு சென்று , மிகப்பெரும் சக்தியுடன் இணைவதே உங்கள் லட்சியம்
என்று நினைவில் அடிக்கடி நினைவுறுத்துங்கள்.
உங்களால் முடியும்; எல்லோராலும் முடியும்.
பொறுமையையும் , உறுதியையும் வளர்த்திக்கொள்ளுங்கள்.
மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.....
உங்கள் கண்களை மூடிய நிலையில் , எந்த உறுதி மொழியோ, தன்னம்பிக்கை தாரகமந்திரமோ, ஜெபமோ , மந்திரஉச்சாடனமோ
செய்யாதீர்கள். அவைகளுக்குள் உங்களை அடைத்துக்கொள்ளதீர்கள்.
அவற்றையும் கடந்த ஒரு நிலையை பின்பற்றுங்கள்.
நீங்கள் பிறந்தது முதல் இன்று வரை எத்தனையோ காரியங்களை , சாதனைகளை செய்துள்ளீர்கள்...!
அதை மனதில் கொண்டு இப்பயிற்ச்சியைத் தொடருங்கள்....
இது முதலில் சிறிது கடினமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
முயற்சி செய்யுங்கள். இடைவெளி இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள் .
இதுவரை இங்கு எழுதப்படுகின்ற விஷயங்களை மறுபடியும் படியுங்கள்.
மீண்டும் படியுங்கள். ஒரு மிகப்பெரும்சக்தி உங்களை அரவணைத்துள்ளது என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள்.
நீங்கள் தோல்வியும் அல்ல; வெற்றியும் அல்ல..... என்றும் நீங்கள் அனைவருமே " ஆனந்தமான அமைதி "
உங்கள் அனைவராலும் முடியும். உறுதியுடன் இதை கூறுகிறோம்....
..... தியானம் மேலும் தொடரலாம்...
நமது மனம் என்பது பல எண்ணங்களின் தொகுப்பு.
நாம் விழித்திருக்கும் நிலையில் எண்ணங்களின் வெளிப்பாடு குறைந்தளவே இருக்கும்.
ஆனால், கண்களை மூடினாலோ எண்ணற்ற எண்ணங்கள் நம்மை தொடர்கின்றன; இடையூறு செய்கின்றன.
இந்த எண்ணங்களை என் விருப்பத்துடன் வந்தனவா? அல்லது என் அனுமதி இல்லாமலேயே
வருகின்றனவா?
என் அனுமதி இல்லாமல் வருகின்றன என்றால் , என் மனம் என் கட்டுபாட்டில் இல்லை என்று கொள்ளலாம்;
மாறாக இருந்தால், எண்ணங்களை கட்டுப்படுத்தும் வல்லமை என்னிடத்தில் உள்ளது என்று கொள்ளலாம்.
என் அனுமதியோ, என் விருப்பமோ இல்லாமல் வருகின்ற எண்ணங்களை எனக்குள் செலுத்துவது யார்?
சிறிது நேரம் நான் கண்களை மூடி அமர்வதற்குள் என் மனம் அலைபாயக் காரணம் என்ன?
நான் எங்கே செல்கிறேன்?
ஏன் குறைந்த நேரமே கண்களை மூடி என்னால் இருக்க முடிகிறது?
இந்த கேள்விகளை நீங்கள் கண்களை மூடி இருக்கும் நிலையில் உங்களுக்குள் கேளுங்கள்...
விடைகளை உடனே எதிர்பார்க்காதீர்கள்.
இங்கு கூறப்படும் அனைத்து விஷயங்களையும் யாவரும் தவறாமல் பின்பற்றுங்கள்.
நீங்கள் எண்ணங்களற்ற நிலைக்கு சென்று , மிகப்பெரும் சக்தியுடன் இணைவதே உங்கள் லட்சியம்
என்று நினைவில் அடிக்கடி நினைவுறுத்துங்கள்.
உங்களால் முடியும்; எல்லோராலும் முடியும்.
பொறுமையையும் , உறுதியையும் வளர்த்திக்கொள்ளுங்கள்.
மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.....
உங்கள் கண்களை மூடிய நிலையில் , எந்த உறுதி மொழியோ, தன்னம்பிக்கை தாரகமந்திரமோ, ஜெபமோ , மந்திரஉச்சாடனமோ
செய்யாதீர்கள். அவைகளுக்குள் உங்களை அடைத்துக்கொள்ளதீர்கள்.
அவற்றையும் கடந்த ஒரு நிலையை பின்பற்றுங்கள்.
நீங்கள் பிறந்தது முதல் இன்று வரை எத்தனையோ காரியங்களை , சாதனைகளை செய்துள்ளீர்கள்...!
அதை மனதில் கொண்டு இப்பயிற்ச்சியைத் தொடருங்கள்....
இது முதலில் சிறிது கடினமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
முயற்சி செய்யுங்கள். இடைவெளி இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள் .
இதுவரை இங்கு எழுதப்படுகின்ற விஷயங்களை மறுபடியும் படியுங்கள்.
மீண்டும் படியுங்கள். ஒரு மிகப்பெரும்சக்தி உங்களை அரவணைத்துள்ளது என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள்.
நீங்கள் தோல்வியும் அல்ல; வெற்றியும் அல்ல..... என்றும் நீங்கள் அனைவருமே " ஆனந்தமான அமைதி "
உங்கள் அனைவராலும் முடியும். உறுதியுடன் இதை கூறுகிறோம்....
..... தியானம் மேலும் தொடரலாம்...
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
மிகவும் நன்றி.
தங்கள் விளக்கம் மனதுக்கு ஒரு தெளிவை கொடுப்பதாக இருக்கிறது.
கண்டிப்பாக மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்.
கல்யாணி வெங்கடராமன்
தங்கள் விளக்கம் மனதுக்கு ஒரு தெளிவை கொடுப்பதாக இருக்கிறது.
கண்டிப்பாக மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்.
கல்யாணி வெங்கடராமன்
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: ஆழ்நிலை த்யானம்
நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீமதி கல்யானிஜி அவர்கள் தெரிவித்தபடி ஆழ்நிலை த்யானம் என்ற போஸ்டை அதன் ஆசிரியர் கூறியது போல் மீண்டும் மீண்டும் படித்து வருகிறேன் . இன்னும் பயிற்சி ஆரம்பிக்கவில்லை. அதை ஆரம்பித்தவுடன் அதைப்பற்றி தெரிவிக்கிறேன்.
அன்புடன்
கண்ணன் சென்னை
அன்புடன்
கண்ணன் சென்னை
aymkan- Sirappu Padhivar
- Posts : 19
Join date : 07/11/2013
Age : 60
Location : Chennai, Tamilnadu
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
நம்மால் சிறிது நேரம் கண்களை மூடி அமர இயலாமல் இருப்பது , நம்மிடம் மன உறுதி இல்லாததன் வெளிப்பாடே ஆகும்.
சரி, மன உறுதி என்றால் என்ன?
ஒரு செயலில் தொடர்ந்து ஒரு முகமாக ஈடுபடுதலே ஆகும்.
அவ்வாறெனில் , கண்களை சிறிது நேரம் மூடி அமர்ந்து இருத்தலும் ஒரு செயலாகும். இது நமது உணர்வுடன் கூடிய செயல்.
நமது அன்றாட மற்ற செயல்களில் சில நேரங்கள் தொடர்ச்சியாக இருக்க முடிகிறது.
ஆனால், இந்த பயிற்ச்சியில் சில நிமிடங்களே இருக்க முடிகிறது.
இதில் தொடர்ச்சியாக கூடுதல் நேரங்கள் இருக்க என்ன செய்வது?
மேலே குறிப்பிட்டது போல் , மன உறுதி நமது ஒவ்வொரு செயலுக்கும் அவசியமாகிறது.
மன உறுதி வளர என்ன செய்வது?
இப்பொழுது கண்களை மூடிய நிலையில் அமராமல், கண்கள் திறந்த நிலையில் அமைதியாக, ஓரிடத்தில் அமருங்கள்.
வேறு எந்த செயலும் செய்யாமல், அதாவது , படித்தல், பாடுதல், இசை கேட்டல்,
தொலைக்காட்சி நோக்குதல், பேசுதல் போன்ற மற்ற எந்த செயலும் செய்யமால் , உறங்காமல்
அமைதியாக உங்காளால் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.
ஒரு தனி அறையிலோ , தோட்டத்திலோ, பூங்காவிலோ அல்லது உங்களுக்கு எங்கே
யாருடைய இடையூறும் இல்லாமல் இருக்க முடியுமோ அங்கு, இப்பயிற்ச்சியை தொடருங்கள்.
நீங்கள் இப்பொழுது உங்கள் கண்களை திறந்து , அமைதியாக சிறிது நேரம் இருக்கப்போகிறீர்கள். வேறு எந்த செயலும் இப்பொழுது உங்களிடத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இப்பொழுது எத்தனை நேரம் இவ்வாறு உங்களால் இருக்க முடிகிறது என்று பாருங்கள்.
உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்.
உங்கள் மன ஓட்டங்களை நோக்குங்கள்.
இது எளிய பயிற்சியாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் சூழ்நிலை அதை தீர்மானிக்கும்.
பொறுமையும் நிதானமும் உடையவர்கள் இந்த யோகத்தை பெறுகின்றனர்; உள்ளதை உள்ளபடி அறிகிறார்கள்.
உங்களால் முடியும்; உங்களால் எல்லோராலும் முடியும்.
மிகப்பெரிய சக்தி உங்களை வழிநடத்துகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.
அது உங்களை விட்டு எப்பொழுதும் நீங்குவதில்லை என்பதில் உறுதியுடன் இருங்கள்.
..... தியானம் மேலும் தொடரலாம்...
நம்மால் சிறிது நேரம் கண்களை மூடி அமர இயலாமல் இருப்பது , நம்மிடம் மன உறுதி இல்லாததன் வெளிப்பாடே ஆகும்.
சரி, மன உறுதி என்றால் என்ன?
ஒரு செயலில் தொடர்ந்து ஒரு முகமாக ஈடுபடுதலே ஆகும்.
அவ்வாறெனில் , கண்களை சிறிது நேரம் மூடி அமர்ந்து இருத்தலும் ஒரு செயலாகும். இது நமது உணர்வுடன் கூடிய செயல்.
நமது அன்றாட மற்ற செயல்களில் சில நேரங்கள் தொடர்ச்சியாக இருக்க முடிகிறது.
ஆனால், இந்த பயிற்ச்சியில் சில நிமிடங்களே இருக்க முடிகிறது.
இதில் தொடர்ச்சியாக கூடுதல் நேரங்கள் இருக்க என்ன செய்வது?
மேலே குறிப்பிட்டது போல் , மன உறுதி நமது ஒவ்வொரு செயலுக்கும் அவசியமாகிறது.
மன உறுதி வளர என்ன செய்வது?
இப்பொழுது கண்களை மூடிய நிலையில் அமராமல், கண்கள் திறந்த நிலையில் அமைதியாக, ஓரிடத்தில் அமருங்கள்.
வேறு எந்த செயலும் செய்யாமல், அதாவது , படித்தல், பாடுதல், இசை கேட்டல்,
தொலைக்காட்சி நோக்குதல், பேசுதல் போன்ற மற்ற எந்த செயலும் செய்யமால் , உறங்காமல்
அமைதியாக உங்காளால் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.
ஒரு தனி அறையிலோ , தோட்டத்திலோ, பூங்காவிலோ அல்லது உங்களுக்கு எங்கே
யாருடைய இடையூறும் இல்லாமல் இருக்க முடியுமோ அங்கு, இப்பயிற்ச்சியை தொடருங்கள்.
நீங்கள் இப்பொழுது உங்கள் கண்களை திறந்து , அமைதியாக சிறிது நேரம் இருக்கப்போகிறீர்கள். வேறு எந்த செயலும் இப்பொழுது உங்களிடத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இப்பொழுது எத்தனை நேரம் இவ்வாறு உங்களால் இருக்க முடிகிறது என்று பாருங்கள்.
உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்.
உங்கள் மன ஓட்டங்களை நோக்குங்கள்.
இது எளிய பயிற்சியாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் சூழ்நிலை அதை தீர்மானிக்கும்.
பொறுமையும் நிதானமும் உடையவர்கள் இந்த யோகத்தை பெறுகின்றனர்; உள்ளதை உள்ளபடி அறிகிறார்கள்.
உங்களால் முடியும்; உங்களால் எல்லோராலும் முடியும்.
மிகப்பெரிய சக்தி உங்களை வழிநடத்துகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.
அது உங்களை விட்டு எப்பொழுதும் நீங்குவதில்லை என்பதில் உறுதியுடன் இருங்கள்.
..... தியானம் மேலும் தொடரலாம்...
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
இந்த பயிற்சியை தவறாமல் செய்து வாருங்கள்.
சோம்பல், ஆர்வமின்மை , தூக்கம் போன்றவை முதலில் வரும். அவற்றை அலட்சியப்படுத்துங்கள்.
இந்த அடிப்படை பயிற்சியில் நீங்கள் வலுவாக மாறிவிட்டால் , பின் தியானம் எளிதாக கைகூடும்.
நாம் நிறைய பேசி , விவாதிப்பதை விட, நிறைய தியானம் செய்வது நமக்கு அதிக நன்மை அளிக்கும்.
இவ்வாறு கண்களை திறந்து பயிற்சி செய்யும் போது உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்.
அவை எவை குறித்து இருக்கின்றன என்று கவனியுங்கள்.
நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க இப்பிறவி எடுத்துள்ளோம்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறிய , முக்கியத்துவம் அற்ற பொருள்களில் நம் ஈடுபாட்டை
குறைத்து , மிகப்பெரிய சக்தியை உணர்வது நம் லட்சியம் என்பதை அடிக்கடி நினைவுறுத்துங்கள்..
..... தியானம் மேலும் தொடரலாம்...
இந்த பயிற்சியை தவறாமல் செய்து வாருங்கள்.
சோம்பல், ஆர்வமின்மை , தூக்கம் போன்றவை முதலில் வரும். அவற்றை அலட்சியப்படுத்துங்கள்.
இந்த அடிப்படை பயிற்சியில் நீங்கள் வலுவாக மாறிவிட்டால் , பின் தியானம் எளிதாக கைகூடும்.
நாம் நிறைய பேசி , விவாதிப்பதை விட, நிறைய தியானம் செய்வது நமக்கு அதிக நன்மை அளிக்கும்.
இவ்வாறு கண்களை திறந்து பயிற்சி செய்யும் போது உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்.
அவை எவை குறித்து இருக்கின்றன என்று கவனியுங்கள்.
நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க இப்பிறவி எடுத்துள்ளோம்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறிய , முக்கியத்துவம் அற்ற பொருள்களில் நம் ஈடுபாட்டை
குறைத்து , மிகப்பெரிய சக்தியை உணர்வது நம் லட்சியம் என்பதை அடிக்கடி நினைவுறுத்துங்கள்..
..... தியானம் மேலும் தொடரலாம்...
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
நம் எண்ணங்களாலே மட்டுமே நாம் இயங்கிகொண்டிருக்கிறோம்.
நம்முடையை ஒவ்வொரு முயற்சியும் நம் எண்ணங்களாலே தீர்மானிக்கப்படுகின்றன. நம் உயர்வும் தாழ்வும் நம்மிடம் மட்டுமே உள்ளது.
இங்கு கூறப்படும் விஷயங்களை பொதுவானவைகள் என்று அலட்சியப்படுத்தாதீர்கள். இவைகள் மிகப்பெரும் சக்தியிடமிருந்து
உங்களுக்கு தெரிவிக்க , உங்களை தெளிவிக்க... வருகின்றன என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
உங்கள் எண்ணங்களை சரியான திசையில் செலுத்துங்கள்.
ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்கும் அவர்களின் அகங்காரமும், நான் என்ற கர்வம் ஏறிய தலைக்கனமும்,
இவைகள் என்னுடையது என்ற மமகாரமுமே , காரணமாக இருக்கின்றன . இது சத்திய வாக்கு.
நமது ஒவ்வொரு செயலையும் நாம்தான் செய்கிறோம் என்று எண்ணிக்கொள்கிறோம். இது உண்மையா?
அவ்வாறெனில் , நமது உடல் தன்னிச்சையாக , தனது தேவைகளை பூர்த்திசெய்கிறதா ?
அல்லது நமது எண்ணங்களினால் நாம் நமது உடலை இயக்குகிறோமா ?
அவ்வாறெனில்,........ நான் யார்?
உடலா? எண்ணமா ?
இப்பொழுதே உங்களுக்குள் சிறு சிறு மாற்றங்கள் நேர்வதற்கு ஆயத்தமாகும்.
மிகவும் நிதானமாக இருக்கும் நேரங்களில் , உங்களுக்குள்ளே இதைப்பற்றி சிந்தியுங்கள்.
இப்பிறவியில் உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நேரம் வந்துள்ளது . இதை தவற விடாதீர்கள்.
உங்கள் அறியாமையாலும் , சோம்பலாலும் இதை அலட்சியப்படுத்துபவர்கள்,
மீண்டும் நீங்கள் விரும்பி வரும்பொழுது , காலம் வெகு தொலைவில் சென்றிருக்கும்...
பின்பு வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
..... தியானம் மேலும் தொடரலாம்...
நம் எண்ணங்களாலே மட்டுமே நாம் இயங்கிகொண்டிருக்கிறோம்.
நம்முடையை ஒவ்வொரு முயற்சியும் நம் எண்ணங்களாலே தீர்மானிக்கப்படுகின்றன. நம் உயர்வும் தாழ்வும் நம்மிடம் மட்டுமே உள்ளது.
இங்கு கூறப்படும் விஷயங்களை பொதுவானவைகள் என்று அலட்சியப்படுத்தாதீர்கள். இவைகள் மிகப்பெரும் சக்தியிடமிருந்து
உங்களுக்கு தெரிவிக்க , உங்களை தெளிவிக்க... வருகின்றன என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
உங்கள் எண்ணங்களை சரியான திசையில் செலுத்துங்கள்.
ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்கும் அவர்களின் அகங்காரமும், நான் என்ற கர்வம் ஏறிய தலைக்கனமும்,
இவைகள் என்னுடையது என்ற மமகாரமுமே , காரணமாக இருக்கின்றன . இது சத்திய வாக்கு.
நமது ஒவ்வொரு செயலையும் நாம்தான் செய்கிறோம் என்று எண்ணிக்கொள்கிறோம். இது உண்மையா?
அவ்வாறெனில் , நமது உடல் தன்னிச்சையாக , தனது தேவைகளை பூர்த்திசெய்கிறதா ?
அல்லது நமது எண்ணங்களினால் நாம் நமது உடலை இயக்குகிறோமா ?
அவ்வாறெனில்,........ நான் யார்?
உடலா? எண்ணமா ?
இப்பொழுதே உங்களுக்குள் சிறு சிறு மாற்றங்கள் நேர்வதற்கு ஆயத்தமாகும்.
மிகவும் நிதானமாக இருக்கும் நேரங்களில் , உங்களுக்குள்ளே இதைப்பற்றி சிந்தியுங்கள்.
இப்பிறவியில் உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நேரம் வந்துள்ளது . இதை தவற விடாதீர்கள்.
உங்கள் அறியாமையாலும் , சோம்பலாலும் இதை அலட்சியப்படுத்துபவர்கள்,
மீண்டும் நீங்கள் விரும்பி வரும்பொழுது , காலம் வெகு தொலைவில் சென்றிருக்கும்...
பின்பு வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
..... தியானம் மேலும் தொடரலாம்...
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Re: ஆழ்நிலை த்யானம்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
தன்னை அறிவதற்கு எவர்க்கும் விருப்பம் இல்லையோ ?
நமது சத்சங்கத்தில் .... வியப்பாக உள்ளது.
காலம் நம்மை விட்டு வெகு விரைவாக சென்று கொண்டு இருக்கிறது.
தயவு செய்து அறியாமையில் இருந்து வெளியே வாருங்கள்..
தன்னை அறிவதற்கு எவர்க்கும் விருப்பம் இல்லையோ ?
நமது சத்சங்கத்தில் .... வியப்பாக உள்ளது.
காலம் நம்மை விட்டு வெகு விரைவாக சென்று கொண்டு இருக்கிறது.
தயவு செய்து அறியாமையில் இருந்து வெளியே வாருங்கள்..
babaji12- New Member
- Posts : 10
Join date : 22/02/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum