ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


ஆயிரம் நாமங்களும் ஸ்ரீபெரியவாளின் அருளும்

Go down

ஆயிரம் நாமங்களும் ஸ்ரீபெரியவாளின் அருளும் Empty ஆயிரம் நாமங்களும் ஸ்ரீபெரியவாளின் அருளும்

Post by arutsakthi Thu Dec 12, 2013 4:35 pm


ஆயிரம் நாமங்களும் ஸ்ரீபெரியவாளின் அருளும்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி மஹாஸ்வாமிகளை நாமெல்லாம் ஸ்ரீமஹாபெரியவா என்றே விளித்து வணங்கி வருகிறோம். அவர்கள் 1993 இல் மஹாஸமாதி அடைந்தது நாம் அறிந்தது தான். அவரது ஸ்தூல தேஹம் நம்மோடு இல்லாமல் இருந்தாலும் அவர்களது அருளை இன்றும் நம்மில் பலர் அடைந்தும் அனுபவித்தும் வருவது உண்மை. இன்று உலகில் மிக பிரபலமாக உள்ள முகநூலில் (Face Book) Sage of Kanchi என்ற பக்கத்தில் பல பக்தர்களும், நண்பர்களும், அன்பர்களும் தங்களது அனுபவங்களையும், தாங்கள் கண்டுகேட்ட அற்புதங்களையும், பெரியவர்களது உபன்யாஸங்களையும் தினம் தினம் பதிந்து வருகிறார்கள். அதனைப்படித்து அனுபவிக்கும் போது நமது வாழ்விலும் அந்த மஹான் நம்மையறியாமல் ஏதாவது அற்புதங்கள் நிகழ்த்தியிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று சிந்தித்தபோது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது மற்ற வர்களுக்கு எப்படியோ? என்னை பொறுத்தவரையில் இது அவர்களின் கருணை அற்புதமே!

சென்ற 1965-66 ஆம் ஆண்டுகளில் எனக்கு அருள் ஏற்பட்டு எனது நினைவு இல்லாமலேயே எனது படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லாமலேயே பல ஆன்மீகக் கட்டுரைகள் எழுதிவந்தேன். எழுதிவந்தேன் என்று சொல்வது தவறு. கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன். வேறு யாராவது எதிரில் உள்ளவர்கள் அதனை எழுதிவரவேணும். அவ்வாறு அனேக விஷயங்கள் - வேதாந்த பரமாகவும், மந்த்ரசாஸ்த்ர பரமாகவும், புராணக் கதையாகவும் பதிவாயின. பெரும்பாலும் எனது தமையனார் தான் இதனை எழுதியிருப்பார். அவைகளில் ஒன்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களுக்கான தமிழ் நாமாவளி போன்ற போற்றி அகவல். எனது அருள்வாக்குகள் வெளிவருவதற்கு நாகரசன்பேட்டையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீகல்யாண ஸுந்தரிதேவி தான் காரணமாக அமைந்தவள். அவள் ஸந்நிதியில் நான் அர்த்தம் தெரியாமல், சொற்பிழையுடன் ஸதா படித்துவந்த ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்தான் இந்த போற்றி அகவலைத் தந்தது. இதில் என்னுடைய முயற்சி எதுவும் இல்லை. ஸமஸ்க்ருதமும் நான் நன்றாக படித்தவனில்லை.
கும்பகோணத்திலுள்ள காமகோடி ஸ்ரீகோபாலய்யர் என்ற ஒருவர் ஸ்ரீமடம் மற்றும் ஸ்ரீபெரியவாளுக்கு மிக நெருங்கியவர். எங்கள் குடும்ப நண்பர். அவரிடம் இதனை ஒரு சமயம் காட்டும் சந்தர்ப்பம் வந்தது. அப்போது அவர் இந்த போற்றி அகவலை ஸ்ரீபெரியவாளிடம் காட்டலாமே என்று சொல்லி என்னை காஞ்சி அனுப்பினார்கள். நானும் எனது தாய்மாமாவும் சென்றோம்.
அப்போது ஸ்ரீபெரியவா ஸர்வதீர்த்தகரையிலேயே இருந்து வந்தார்கள். ஸ்ரீமடத்துப் பூஜையை அப்போது ஸ்ரீபுதுப்பெரியவாளான ஸ்ரீஜயேந்திர ஸ்வாமிகள்தான் செய்துவந்தார்கள். முதலில் மங்கள த்ரவ்யங்களுடன் இந்த ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களுக்கான தமிழ் போற்றி அகவல் கையெழுத்துப்பிரதி நூலையும் வைத்து மடத்தில் ஸ்ரீபுதுப்பெரியவாளிடம் கொடுத்தேன். அவர்கள் அதனை பார்த்தார்கள். இது எப்படி எழுதப்பட்டது என்று கேட்டார்கள். வந்தவிதத்தை கூறினேன். அதற்கு அவர்கள் சந்தோஷித்து 'ஸர்வதீர்த்தகரையிலே உள்ள மஹாபெரியவாளிடத்திலே காட்டு' என்று கூறி என்னிடமே திருப்பி தந்துவிட்டார்கள். அதன்பின் அங்கிருந்து கிளம்பி ஸர்வதீர்த்தகரை சென்றோம். அங்கு ஸ்ரீசரணாள் ஒரு பவழமல்லிகை மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த Pose கண்ணன் கையில் குழலுடன் புன்னைமரத்தில் சாய்ந்து நிற்கும் படம் பார்த்திருப்போமே அதனை நினைவூட்டியது. சிறிது நேரத்திற்குப்பின் அங்கு பக்கத்திலுள்ள அறையில் போய் அமர்ந்து விட்டார்கள். ஸ்ரீமடம் சிப்பந்திகள் அங்கு தரிசனத்துக்கு நின்று கொண்டிரு ந்தவர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினார்கள். எங்கள் முறை வந்தவுடன் நானும் என் மாமாவும் உள்ளே சென்று பெரியவர்கள் முன் பழம்-புஷ்பம் வைத்துள்ள தட்டில் இந்த ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களுக்கான தமிழ் போற்றி அகவல் கையெழுத்துப்பிரதி நூலையும் வைத்துவிட்டு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தோம். இதற்குமுன் ஸ்ரீபெரியவாளை நீடாமங்கலத்தில் ஒருமுறையும். மருதாநல்லூரில் ஒருமுறையும், சந்திரசேரகபுரத்தில் (13வயதில்) ஒருமுறையும் மூன்றுமுறை தரிசித்திருக்கிறேன். இப்போது 29 வயதில் அவர்களை மறுமுறை தரிசிக்கிறேன். அது ஒரு ஆனந்த அனுபவமே! ஏனெனில் என் சிறுவயது தொட்டு அவர்களைப்பற்றி கேள்விப்பட்டும், புத்தகங்களில் படித்தும் அவர் காமாக்ஷியின் வடிவமே என்பது எனது தீர்மானம். அதனால் மெய்சிலிர்த்து நின்றேன். ஸ்ரீபெரியவா என்னைப்பார்த்து கையெழுத்துப்பிரதியைச் சுட்டிகாட்டி -
'இது என்ன?' என்று கேட்டார்கள். நான் விவரத்தை மிக மெல்லி குரலில் பயந்துகொண்டே சொன்னேன். அதை கேட்டுவிட்டு ஸ்ரீபெரியவா அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு தட்டிலிருந்த உதிரி பூக்களை எடுத்து அதன் மீது போட்டார்கள். பின் என்னைப்பார்த்து 'இதை அங்கே மடத்திலே புதுப்பெரியவாளிடத்திலே கொடுத்துவிடு' என்று உத்தரவிட்டார்கள். இந்த நேரமே என் வாழ்க்கையின் மிக உயர்வான நேரமாவும், எனது எழுத்துக்கு கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரமாகவும் எனக்கு தோன்றியது. எங்களுக்கு தட்டில் பிரசாதம் வழங்கி ஆசியருளினார்கள். பின் நமஸ்கரித்துவிட்டு அங்கிருந்து ஸ்ரீமடம் வந்தேன்.
ஸ்ரீபெரியவா உத்திரவின்படி அன்று மாலை தரிசனத்தின் போது ஸ்ரீபுதுப்பெரியவாளிடம் இந்த கையெழுத்துப்பிரதியை ஸமர்ப்பித்தேன். இதற்கு மடத்தின் ஸ்ரீமுகம் வேணும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் இது மடத்திலுள்ள அறிஞர்; பார்வையிட்டுப்பின்பு அனுப்பி வைக்கப்படும் என்று சொன்னார்கள். பக்கலில் இருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள் என்பவரிடம் கொடுத்தார்கள். அன்றும் மறுநாளும் இருந்து ஆசைதீர ஸ்ரீபெரியவாளைத் தரிசித்துவிட்டு திருப்பினோம்.
பின் சுமார் 8 மாதங்கள் சென்றன. கும்பகோணம் ஸ்ரீகோபாலய்யரிடமிருந்து என்னை வரச்சசொல்லி கடிதம் வந்தது. நான் போனவுடன் ஸ்ரீமடம் பிரஸாதத்துடன் கையெழுத்துப்பிரதி நூலையும் தந்தார். அது அவர்கள் மூலம் எனக்கு அனுப்பபட்டு வந்தது. அதில் ஸ்ரீமுகம் போன்ற கடிதம் ஒன்று இருந்தது. ஸந்நிதானத்தில் பார்வையிட்டதாகவும், மிக நன்றாக இருக்கிறது என்றும் கூறி ஆசீர்வாதப்பிரஸாதம் அனுப்பியுள்ளதாக கண்டிருந்தது. மேலும் தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் ஆலயங்களில் தமிழ் அரச்சனை என்று முழக்கம் இருப்பதால் இதற்கு ஸ்ரீமுகம் என்று கொடுத்தால் அதுவே ஆதாரமாகிவிடும் என்பதால் ஸ்ரீமுகம் என்று கொடுக்கவில்லை என்றும் எழுதியிருந்தது. நானும் இதுவே ஸ்ரீபெரியவாளின் மிகப்பெரிய அனுக்ரஹம் என்று மகிழ்ந்தேன். ஏனென்றால் இதன் ஸ்ரீமுகத்தை வைத்துக்கொண்டு இதனை புத்தகமாக அச்சிட்டு வெளியிடக்கூடிய வகையில் அப்போது எனக்கு பொருளாதாரவசதியும், அனுபவமும் இல்லை. அதனால் அந்த கையெழுத்துப்பிரதி நூலை அப்படியே வைத்துக் கொண்டேன். தெரிந்தவர்களிடத்தில் காட்டி மகிழ்வேன். அவ்வளவே!
இந்த நிகழ்ச்சியை ஏன் சொல்லுகிறேன் என்றால் அதில் ஸ்ரீபெரியவாளின் அற்புத அருள் மறைந்துள்ளது என்பதை கூறவே! என்னால் 1965-66ல் ஆக்கப்பட்ட சாதாரண போற்றி அகவலாக இருந்த ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களின் பொருள் விளக்கங்கள் அப்போது அச்சாகியிருந்தால் ஏதோ ஸாதாரணமான ஒரு தமிழாக்கமாக இருந்திருக்கும். ஆனால் அது இப்போது தனி இசைத்தமிழ் கவிதைப்பாக்களாக எனது வழிதோன்றலான குமாரன் செல்வன் நாகசுந்தரம் மூலமாக மக்கள் பாடும் விதத்தில் 1000 தமிழ் கீர்த்தனைகள் இந்நாட்களில் வெளிவந்ததேதான் அவர்களது அனுக்கிரஹம். இதனை பெரியவர்களது அருள்தான் செய்தது என்பது முக்காலும் மறுக்கமுடியாத உண்மை. அன்று அது வெளிவந்திருந்தால் போற்றி அகவல் மட்டுமே! ஆனால் இன்று இது அனைவரும் ராகதாளத்துடன் இசையமைத்து பாடும் வழியில் அருள்தரும்ஆயிரம் தமிழிசைப்பாடல்கள் என்ற பெயரில் இருபாகங்களாக புத்தக வடிவில் வெளிவந்துள்ளன. அதுவும் எந்த ஸ்தலத்தில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களை வாக்தேவதைகள் ஸ்ரீலலிதையின் திருமுன்பு இயற்றியருளினார்களோ அந்த ஸ்தலமான திருமீயச்சூர் (தஞ்சைமாவட்டம்- மாயவரம் திருவாரூர் சாலையில் பேரளம் அருகில்) ஸ்தலத்தில் ஸ்ரீலலிதையின் திருமுன்பு இந்த நூல் வெளியிடப்பட்டது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
இதில் மேலும் ஒரு சிறப்பு உள்ளதையும் எடுத்துக்காட்டவேணும். ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமங்களுக்கு ஸமஸ்க்ருதத்தில் 'ஸெளபாக்யபாஸ்கரம்' என்ற பெயரில் பொருள் விளக்கம் எழுதிய மஹான் ஸ்ரீபாஸ்கரராயமகீ என்ற பெரியார் என்பதை அறிஞருலகம் அறியும். அவரது திருவருளும் இந்த நூலுக்கு கிடைக்கவேணும் என்பது அன்னையின் விருப்பமான ஸ்ரீபெரியவாளின் அருள் என்பதாக அமைந்தது. - அவரது உபாஸனா வழியில் வந்த வழித்தோன்றலான (பரம்பரை) ஆந்த்ரமாநிலம் நாராயணபெட் என்ற இடத்தில் வசிக்கும் பூஜ்யஸ்ரீ பரஸுகானந்தநாதர் என்ற ஸ்ரீபத்மாகர் பாஸ்கர் தேவ்ஜி என்பார் இதற்கு ஒரு ஆசியுரை அருளி உள்ளார்கள். ஸ்ரீமஹாபெரியவா தன்னுடைய திருவருளை தான்மட்டுமே வழங்கவில்லை. ஸ்ரீஆதிசங்கரரே உரைசெய்யாமல் விடப்பட்ட இந்தநூலுக்கு உரைசெய்த ஸ்ரீபாஸ்கரராயமகீ அவர்களின் திருவருளையும் சேர்த்து அவர்களது பரம்பரை மூலமாக வழங்கச் செய்து ஆண்டருள் செய்திருப்பது நானடைந்த விலைமதிக்க முடியாத செல்வம். இதனை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்து கொண்டே இருக்கிறேன். அருளை நினைத்து அனுபவித்து ஆனந்தப்படுகிறேன். பெரியவாளின் அருள் பிறப்பில்லா பெருநெறியை அடைவிக்கும் என்பது நிச்சயமே ஆனாலும் பரம்பரைக்கும் தொடர்ந்து அருளை நல்கியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது என்னைவிட பாக்யசாலி வேறு எவருளர் என்று வெருமிதம் அடைவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்துவிடமுடியும்?

அருளே நிறைக எங்கும்!
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum