ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


மௌனகுரு சுவாமிகள் வரலாறு

Go down

மௌனகுரு சுவாமிகள் வரலாறு  Empty மௌனகுரு சுவாமிகள் வரலாறு

Post by arutsakthi Tue Oct 15, 2013 11:53 am

மௌனகுரு சுவாமிகள் வரலாறு

இவரும் பாடகச்சேரி ஸ்வாமிகள் போன்று ஒரு சித்தர் - மஹான்
படியுங்கள்
மகான்கள் வரலாறு மனதை சுத்தமாக்கும். அருட்சக்தி

தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் தோன்றித் தம் தவவலிமையால் ஆன்மீக நெறிகளைப பரப்பியும், பாமரர் நல்வழி நடந்து வாழவும் பாடுபட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் ஆன்மிகம் தழைக்க மௌனகுரு சுவாமிகள் என்னும் தவப்பெரியார் சித்தராகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்து மறைந்தது பலருக்கும் தெரியாத செய்தி. கவியோகி சுத்தானந்த பாரதி மௌனகுருவின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து எழுதியதோடு நின்றுவிடாமல் அவர் பெருமைகளைப் போற்றி ''ஓங்கார தொட்டிலிலே'' என்னும் தலைப்பில் ஒரு பாவும் இயற்றியுள்ளார்.
மௌனகுரு சுவாமிகள் ஊர், பேர், உறவு, சுற்றம் யாதுயென அறியப்படாதவர். அவர் கன்னடத்தில் ''ஒப்பரு இல்ல, நீ ஒந்தே ... இதயதல்லி .. ஓம் சிவம் (நீயன்றி யாரும் இல்லை, நீயே உறுதுணை இதயத்தில் இருக்கும் சிவனே ஓம் சிவம்) என்று அடிக்கடி கன்னடத்தில் முணுமுணுப்பார், தனக்குத்தானே பேசிக்கொள்வர். வேறு வெளிப்பேச்சு இல்லை. யாரையும் தன்னிடம் அணுகவிடாமல் தானே தானாகத் தன்னந்தனியாக இருந்த இடத்தில் மோனத்தில் ஆழ்ந்துவிடுவார்.
சித்தென்பது ஓர் இயக்கம். அவ்வியக்கம் எங்கிருந்து தோன்றியதோ அத்தோன்றும் இடத்திலேயே சென்று ஒடுங்குவதாகும். அப்படி தோன்றிய இடத்திலேயே சித்தம் ஒடுங்கினால் அதுவே பிரம்மம். பிரம்மம் என்றால் மௌனம் அல்லது அசையாநிலை. ஓர் இயக்கம் தோன்றிய இடத்திலேயே மீண்டும் ஒடுங்கினால், இதாவது அசைவற்ற நிலையிலிருந்து அசைந்து இயக்க நிலைக்கு வந்த இயக்கம் மீண்டும் ஒடுங்கினால் அசையாது மௌனமாக பிரம்மநிலை எய்தும். இதையே மோனநிலை என்றும், சும்மா இரு என்றும் ஞானிகள் கூறுவர். இவ்வாறு பிரம்மத்தினின்று தோன்றி பிரம்மத்தில் ஒடுங்குவதே ஞானமாகும். இதை பரப்பிரம்மம் என்பர்.
மௌனகுரு சுவாமிகள் தொடக்கத்தில் சென்னை சூளையில் அமைந்துள்ள குட்டியாண்டவன் கோவில் வளாகத்தில் வதிந்து கொண்டு சட்டி வைத்து சமைத்து உண்டுவந்தார். ஒரு சட்டி. கல்லடுப்பு, மர அகப்பை இவைதாம் அவர் உடைமைகள். இவற்றை எப்போதும் ஒரு முதிய நாய் பாதுகாக்கும்.
மௌனகுரு சுவாமிகள் காலையில் தம் கடன்களை முடித்தபின் சிவனைத் தொழுதுவிட்டு கால் நடையாகவே யானைக்கவுனிஅருகே சௌகார் பேட்டையில் உள்ள பள்ளியப்பன் தெருவில் அமைந்த அருணாசலேசுவரர் கோவில் வழியாகச் சென்னைத் துறைமுகம் வரைச் செல்வார். அங்குள்ள அரிசி வணிகர் சுவாமிகளின் வருகையை எதிர்நோக்கி தம் வணிகத்தை தொடங்காமல் காத்திருப்பர். சுவாமிகள் அங்கு சென்றவுடன் தனக்கு தோன்றிய கடைக்கு எதிரே நிற்பார். அக்கடை வணிகனும் சுவாமியை வணங்கி அவர் வைத்திருக்கும் சட்டியில் சிறிதளவு அரிசியும் பாசிப்பருப்பும் இடுவான். அப்போது மௌனகுரு எல்லா வணிகரையும் பார்த்து முறுவலித்து அருளாசி வழங்குவார். அதன்பின்னரே எல்லா வணிகரும் வணிகத்தைத் தொடங்குவார்கள். அன்று அவர்கள் அனைவருக்கும் லாபம் தான். இவர் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
மீண்டும் திரும்பும் வழியில் அருணாச்சலேசுவரர் கோவிலினுள் சென்று ஈசனிடம் தனக்கு முக்தி அருளும்படி நெஞ்சார மன்றாடி வணங்குவார். அவர் நெஞ்சார வேண்டுகையில் அவர் உதடுகள் கன்னடச் சொற்களை பலுக்குவது போல் இருத்தலால் சுவாமி ஒரு கன்னடர் என்று அறிய முடிகிறது. கோவிலை விட்டு வெளியேறுகையில் சணல் திரியில் நெருப்பேற்றிக்கொண்டு தெருவில் கிட்டும் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு குட்டியாண்டவர் கோவிலுக்குச் சென்று கல்லடுப்பில் தணல்மூட்டி தான் பெற்று வந்த அரிசி, பாசிப்பயறு மற்றும் சில காய்கறிகளை சட்டியில் இட்டு சமைத்து சில கவளங்களை தான் உண்டுவிட்டு எஞ்சியவற்றை தம் உடமைகளைக் காக்கும் நாய்க்குக் கொடுத்து பின் ஓர் ஓரமாக அமர்ந்து மோனதவம் மேற்கொள்வார்.
சித்தர் என்பதற்கான செயல்கள் :
வழமையாக குட்டியாண்டவர் கோவிலில் இருந்து துறைமுகம் வரை செல்லும் சுவாமிகள் ஒரு நாள் வழியில் உள்ள அருணாச்சலேசுவரர் கோவிலில் உள்ள ஈசன்பால் ஈர்ப்புகொண்டு அக்கோவிலின் எதிரே உள்ள வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்து ஈசனை நோக்கி மோனதவத்தில் ஆழ்ந்துவிட்டார். மௌனகுரு சுவாமிகள் அமர்ந்த திண்ணை வீட்டுச் சொந்தக்காரர் அந்த வீட்டை வாங்கிப் பதிவு செய்த நாளில் சுவாமிகள் திண்ணையில் உட்கார்ந்ததால் அவரை அப்புறப்படுத்த ஒவ்வாது அவர்க்கு அன்பரானார். நாள்தோறும் சுவாமிகள் காலையில் எதிரே உள்ள அருணாச்சலேசுவரர் கோவிலினுள் சென்று நெஞ்சார மணிக்கணக்கில் முக்திப்பேறு வேண்டி மன்றாடுவார். சுவாமிகளின் வசதிக்காக அந்நாளில் ஆங்கில ஆட்சியாளர் அவர் அமர்ந்திருந்த திண்ணைகருகிலேயே ஒரு குழாய் அமைத்து விட்டனர். அவர் நாளடைவில் சிவசந்தியை தம் உள்ளத்திலே கண்டு திண்ணையிலேயே அமர்ந்து ஊழ்கம் (நிஷ்டை) கூடினார். அவர் தலை குனிந்து தன் உள்ளத்தில் உறையும் ஈசனையே பார்த்திருக்கும். பித்தரோ, ஊமரோ என்று மக்கள் கருதுவர். கேள்வியற்று, பற்றற்று, துடிப்பற்று, உணவற்று, உறக்கமற்று இருந்த இடமே இருப்பாகிப்போன இந்த விந்தைமிகு தவக்கோலத்தை கண்ட அன்பர் கூட்டங் கூட்டமாக வந்து வணங்கினர். மௌனி உடல், மன நினைவில்லாமல் இருந்தார்.
ஒருநாள் சுவாமிகள் ஊழ்கத்தில் (நிஷ்டையில்) கூடியிருந்தபொழுது அவர் வீற்றிருந்த வீட்டிற்கு வண்ணம் பூச வந்தவர் சுவாமிகளின் பெருமைகளை அறியாமல் சுவாமிகளின் உடைமைகளைத் தெருவில் வீசியெறிந்துவிட்டு பணியைத் தொடங்க முற்பட்டார். என்னே விந்தை! வண்ணம் வைத்திருந்த சட்டியின் அடிப்பாகம் உடைந்து வண்ணம் எல்லாம் தரையில் வழிந்தோடியது. வண்ணம் பூசுபவரின் கை உயர்த்திய நிலையில் அசைவற்று நின்றுவிட்டது. வண்ணம் பூசுபவரின் அலறலைக் கேட்ட அன்பர்கள் சுவாமிகளை வேண்டி வண்ணம் பூசுபவரின் அறியாமையை பொருத்தருளும்படி வேண்டினர். சுவாமிகள் முறுவலித்தபடி (smile) அருட்பார்வையை வண்ணம் பூசுபவரின்பால் செலுத்தியவுடன் கொட்டியவண்ணம் சட்டியினுள் சேர்ந்த்து. அசைவற்ற கை இயல்புநிலை பெற்றது. இந்த சித்து விளையாட்டை கண்ட அனைவரும் சுவாமிகளின் அன்பர்கள் ஆயினர்.
மாதின் கனவில் ஈசன்
மௌனகுரு சுவாமிகள் சில காலத்திற்குப்பின் பொழுதெல்லாம் ஈசனையே வேண்டி முக்திபெற மோனதவத்தில் இருந்ததால் துறைமுகம் சென்று அரிசிபெற்று சமைத்து உண்பதை விட்டுவிட்டார். இது கண்ட ஈசன் சென்னை வியாசர்பாடியில் வதிந்துவந்த சிவபக்தையான தூயபத்தினியின் கனவில் தோன்றி ''என் அன்பன் நான் குடிகொண்டிருக்கும் கோவிலின் எதிரே உள்ள திண்ணையில் மௌனியாக ஊழ்கத்தில் கூடியுள்ளான். அவனுக்கு நாள்தோறும் சோறு அளித்துவா'' என்று பணித்தார். அம்மாதும் ஈசனின் கட்டளையை ஏற்று தூய அன்புடன் நல்லமுது சமைத்து மௌனிக்கு ஈந்து அவர் திருவடிகளை மலர்தூவி வணங்கிவந்தார். அதனால் அம்மாதின் குடும்பம் செழித்தது. குலம் தழைத்தது. அவளது அரிசிப் பானையில் நாடோறும் ஒரு வெள்ளிப்பணம் இருக்கக் கண்டாள். அப்பணத்தை குருவின் அமுதுக்கே அவள் பயன்படுத்தினாள்.
குடிகாரன் திருந்தினான்
அத்தெருவில் வதிந்துவந்த பெருங்குடியன் ஒருவன் குடிவெறியில் வெறியாட்டம் போட்டு சுவாமியைக் கண்டபடித் திட்டித் திரிந்தான். அதன்விளைவாக அவனுக்கு உதடு வெளுத்தது, உடல் அரித்தது. வெண்குட்ட நோய் ஏற்பட்டு வாழ்க்கை துயரமாகியது. அவன் மனைவி அக்குடியனை சுவாமிகளிடம் அழைத்துவந்து வணங்கிநின்று தன் கணவனை மன்னிக்கும்படி வேண்டினாள். சுவாமிகள் அம்மாதின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவனை மன்னிக்கும் வகையாக ''தூ தூ போ'' என்றார். அத்தோடு அவன் குடியை விட்டொழித்துத் திருந்தினான், அறிவு பெற்றான். சுவாமியின் அன்பால் அவன் வெண்குட்ட நோயும் குணமடைந்தது. இது கண்ட அன்பர்கள் சித்தரின் பெருமையை அறிந்து பணிந்தனர்.
நவகண்ட யோகி
ஞானிகள், சித்தர்கள்,யோகிகள்ஆகிய அனைவருமே ஈசன் தம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதற்காக மௌனநிலை, உண்ணாநிலை, யோகநிலை போன்ற நிலைகளை மேற்கொண்டு முக்தி பெற்றனர்.
சுவாமிகளும் ஈசன் அருள்பெற்று முக்தியடைய அரிய யோகமான நவகண்ட யோகம் மேற்கொள்ளவது வழக்கம். நவகண்ட யோகம் என்பது தன் உடலில் தலை முதல் கால் வரை உள்ள பாகங்களை ஒன்பது கூராகப் பிரியச் செய்து ஈசனை நோக்கி தவமியற்றுவதாகும்.
சுவாமிகள் நள்ளிரவு நேரத்தே தன்னுடைய தலை அண்ணாமலையார் சந்நிதிக்கு எதிராகவும் உடலின் மற்ற பாகங்கள் எட்டாகப் பிரிந்து திசைக்கு ஒன்றாக பிரியவைத்து நவகண்ட யோகம் செய்யும்பொழுது இரவு நேரத்தே சுற்றுக்காவல் வரும் காவலர்கள் முதலில் கண்டு அச்சமுற்றாலும் பின்பு தெளிவுபெற்று வணங்கிப்பணிந்து செல்வர். காவலர்கள் சுவாமிகளின் நவகண்ட யோகநிலையை அன்பர்களுக்கு அறிவித்தனர். அவர்களும் தூய பக்தியுடன் மௌனியைப் பணிந்தனர்.
மௌனகுரு யாரையும் தன் அருகே அண்டவிடுவதில்லை. தம்மை அறிந்து அறிவுதாகமுடைய ஒரு மாணவனையே அவர் எதிர்பார்த்திருந்தார். அவர் எதிர்பார்த்த மாணவன் சென்னை வடமலை மேஸ்திரி தெருவில் வதிந்துவந்த பொன்னுசாமி முதலியார் என்பாரது தலைமகன் பாலுவே ஆவார். பாலு பள்ளிக்குச் செல்லும்போது வழியில் சுவாமிகளை வணங்கிச் செல்லும் தூய நல்லன்பன். பாலு ஒருநாள் தனக்கு ஞானமளிக்கும் குரு இவர்தான் என உணர்ந்து பள்ளிக்குச் செல்வதை விடுத்து சுவாமிகள் அமர்ந்திருக்கும் திண்ணை அருகே வந்து நின்று கொள்வான். சுவாமிகள் அவனை விரட்டும் பொருட்டு ''தூதூபோபோ'' என விரட்டுவார். பாலுவும், அவர் விரட்டினாலும், தன் வீட்டார் கண்டித்தாலும் கேளாமல் விடாப்பிடியாக சுவாமிகளிடமே அடைக்கலமானான். சுவாமிகள் சில காலத்திற்கு பின்பு தான் தேடிக் கொண்டிருந்த அறிவுதாகமுடைய மாணவன் இவனே என்றுணர்ந்து மனம் களித்தார். பாலுவுக்கு திருமந்திரம், ஞானவாசிட்டம், கைவல்யம், திருக்குறள் எல்லாம் அறியவைத்தார். பாலுவும் சுவாமிகளின் கருத்தினை அறிந்து அன்பர்கள் அனைவருக்கும் விளக்கி உள்விழிப்படைய வைத்தார். சுவாமிகள் தன்னையும் அன்பர்களையும் ஆட்படுத்தும் விந்தையை உணர்த்தினர்.
தவப்பெரியார் மௌனகுரு முக்காலமும் உணர்ந்த ஞானியாதலால் தான் ஈசனின் ஞானஒளியில் இரண்டறக் கலக்கும் நாளைத் தன் ஞானக்கண்ணால் உணர்ந்த நாள்முதல் உணவைநிறுத்தி தன் மாணாக்கன் பாலுவுக்கு தான் முக்தி அடையும் நாளைச் சைகையால் உணர்த்தினார். பேராளமான அன்பர்கள் வந்து சுவாமியைக் கண்டுபோயினர். சுவாமிகள் மௌன ஆசியால் பலரையும் பக்குவப்படுத்தி 07 - 02 - 1902 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்குத் தன் உடலை உதறிவிட்டு ஈசனின் ஞான ஒளியில் ஒன்றிப்பானார். அக்கணமே சுரைக்காய்சித்தர், கண்ணுக்குட்டி சுவாமிகள் தோன்றி வாழ்த்தி வணங்கினர். அவர் உடலை பாலுவும் பிற அன்பர்களும் மலரால் அணிசெய்து தேவாரம், திருவாசக முழக்கத்துடன் பல்லக்கில் சுமந்துசென்று திருவொற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்கு அருகே அப்பர்சாமித் தெருவில் கடற்கரைமேட்டில் சமாதிவைத்தனர். அந்த சமாதி இன்று ஒரு சிறுகோவிலாக எழுப்பப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த திண்ணை வீட்டின் திண்ணைப்பகுதியில் அவர் நினைவாக ஒரு சிறுகோவில் கட்டப்பட்டு இன்றுவரை நாள்தோறும் பூசனை நடந்துவருகின்றது.
ஓங்காரத் தொட்டிலிலே
ஓங்காரத் தொட்டிலிலே - வளரும்
யோகச்சி காமணியே
நீங்காத நிட்டையிலே - நிலவும்
நீலமணிச் சுடரே
முக்குணத்தைக் கடந்த - தூய
மோனக் குருமணியே
எக்கட்டும் இல்லாதே - இலங்கும்
இன்பத் தவமணியே
ஆங்காரத்தைப் பிளந்தே - உலகின்
ஆசையை வேரறுத்தே
தூங்காது தூங்குகின்ற - சாந்த
சுதந்தரச் சொக்கே!
அருட்பெருஞ்சோதி - அரு
ணாச்சலர் சந்நிதியில்
விருப்புடனிருந்தே - முத்தி
வீட்டினைக் கண்டவனே
திண்ணைச் சமாதியிலே - என்றும்
திண்ணென ஊன்றிக் கொண்டே
உண்ணுங் கருத்துமின்றி- அறிவை
ஊட்டியெம்மை வளர்த்தாய்
மோனகுரு போற்றி - ஜீவன்
முக்திக்குரு போற்றி
ஞானகுரு போற்றி - அன்பு
நாயகனே போற்றி.
: கவியோகி - சுத்தானந்த பாரதியார்
மேற்சொன்னவை யாவும் ''அருள்மிகு மௌனகுரு சுவாமிகள் ஆலய வரலாறு, 2013'' எனும் 20 பக்க குறுநூலுள் இடம்பெற்றுள்ளது.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum